இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும். ஒரு நிலையான சமுதாயம் என்று நாம் கருத்தில் கொள்ளும் போது எமது அன்றாட வாழ்வின் ஆரோக்கிய செயற்பாடுகளும் சூழலியல் தொடர்பில் எமது இருப்புக்களை நிலைபெறும் வகையில் பாதுகாக்கும் செயற்பாடுகளையும் நாம் உள்ளடக்கிக்கொள்வது அவசியமாகின்றது. இங்கே அனைத்து வாழ் உயிர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் நிலையான உற்பத்தி உணவை வழங்கும் போது, இயற்கை வளங்களின் சீரழிவைக் குறைத்து புவியினை பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை எல்லோர் மத்தியிலும் காணப்படுகிறது.
உமிழ்வு, நிலம், நீர் மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவற்றில் விலங்கு சார்ந்த உணவுகள் முக்கிய பங்கு வகிப்பதால், காலநிலை மாற்றம் மற்றும் வள பிரித்தெடுத்தலுக்கு விவசாயம் பெரிதும் உதவுகிறது என்பது பலதரப்பட்ட ஆய்வு முனைவோரின் கருத்துக்களாக காணப்படுகிறது. ஆம் நிச்சயம் ஓர் முறை சிந்திக்கின்றபோது விவசாயம் என்பது ஒருபடிநிலையில் உதவுகின்றது என்றே கூறமுடியும்.
விலங்கு நலன் உரிமைகளை பேணி பாதுகாப்பது என்பது உலகளவில் கடைபிடித்துவரும் ஒரு முறைமை ஆகும். இன்றைய காலகட்டத்திலும் சரி, கடந்த காலங்களிலும் சரி விலங்கினங்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்வாங்கப்படுகின்றன . அவற்றை பேணி பாதுகாப்பது என்பது எங்கள் எல்லோர்களினதும் கடமையாகும். விலங்குகள் இன்று தொழிற்சாலைகள் ,ஆடைத்தொழில் , விலங்கு விவசாயம் போன்ற பல செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக உலகில் காணப்படும் பண்ணை விலங்குகளில் ” தொழிற்சாலை பண்ணை என்பது கோழிகள் , வான் கோழிகள் ,பசுக்கள் , பன்றிகள் என்பவற்றை உணவுக்காக வளர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் இரசாயன நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்கப்படுகின்றது. இத்தகைய செயற்பாடுகளாக விலங்குகள் துன்புறுத்தப்படுத்தல் என்பது எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.
இத்தகைய காரணங்கள் மத்தியில் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத உணவு தெரிவு முறைகள் சூழலுக்கும் சுகாதார ரீதியிலும் நன்மையை பெற்றுக்கொடுப்பவையாக காணப்படுகின்றது. அவை மேலும் விலங்குகளின் நன்மைகள் மற்றும் அவ் உயிரினங்களின் சுதந்திரத்துக்கு வழிகொடுப்பவையாகவும் விலங்குகள் சாரதா உணவு முறைகள் அமைகின்றது என்பதில் ஐயமில்லை. அவ்வகையான உணவு முறைகளே விலங்குகளை பாதுகாக்கும் ஓர் உணவு பரம்பல் முறை எனலாம். அத்துடன் காலநிலையை கட்டுப்படுத்துவதற்கும் நட்பு முறையிலான செயற்பாடுகளை கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வகையிலே விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறையாக தாவர அடிப்படையிலான உணவு முறைகளை நாம் கூறிக்கொள்ளலாம். இது ஒரு பரஸ்பர அதி உயர் சைவ உணவுமுறையாக பார்க்கப்படுகின்றது. இதனையே வீகன்(Vegan) உணவு என அழைக்கின்றோம். இன்று உலகில் பல மக்களினுடைய உணவுத்தேர்வுகளில் இவ் உணவுவகையை அவர்களது ஆரோக்கியத்துக்காக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாவர அடிப்படையிலான புரதத்தால் நிறைந்த உணவுகளாக காணப்படுவதுடன் விலங்குகளினுடைய தயாரிப்புகள் எதுவும் அற்ற ஓர் அதி உயர் சைவ உணவுக்காக இவ் வீகன் உணவு வகைகள் காணப்படுகின்றன. இவ் தாவர அடிப்படையிலான புரதத்தில் நிறைந்துள்ள வீகன் சைவ உணவுகள் விலங்குகளால் பெறப்பட்ட புரதத்தில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் புரதங்களையும் கொண்டிருக்கவில்லை என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. எனவே இவ் உணவுதெரிவு முறையானது விலங்கு சுரண்டல் மற்றும் அவற்றிற்கு ஏற்படும் கொடுமையை விலக்க முயற்சிக்கும் ஒரு உணவு வாழ்க்கை முறையாக வரையறுக்கப்படுவதுடன் குறிப்பாக விலங்குகளை பாதுகாப்பதற்கான ஓர் மாற்று வழியாக இது அமைகின்றது என்பதையும் நம்பமுடிகின்றது.
மேலும் சைவ உணவு பழக்கம் பல கலாச்சார மனப்பான்மைகளுடன் குறுக்கிடுகிறது, மேலும் உலகம் முழுவதிலும் உள்ள பலரிடமிருந்து வேறுபடுகிறது என்றே கூறலாம். எம்மால் ஒரு சிறிய பகுதியிலான நன்மையையே விலங்குகளுக்கு வகுப்பதற்காக பெயரோடும் நிலையானது ஒரு சிறிய மாற்றத்தில் இருந்து ஓர் பரஸ்பர மரியாதையை கொண்டு வரும் என்பது நிச்சயமாகிறது.
வீகன் உணவு வகைகளை தேர்ந்தெடுப்பதன் பொருட்டு எமது அன்றாட ஆரோக்கிய வாழ்வில் சாத்தியமான மாற்றங்களை கொண்டு வருகின்றது என பல கருத்துக்கள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படுகின்றது. எங்களுடைய வாழ்க்கை முறையில் நாம் கடைபிடிக்கும் பல்வேறு வகையான செயற்பாடுகளே ஆரோக்கிய நிலையில் குறுக்கிடுபவையாக காணப்படுகின்றது. அனால் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் உணவு முறைகளில் இவ் வீகன் உணவின் அணுகு முறையானது எவ்வாறு நன்மையை தருகின்றது என்பதை நோக்கும் இடத்து பல நோய்களை கட்டுப்படுத்துவதற்கு தீர்வாக அமைகின்றது .
குறிப்பாக தாவர அடிப்படையிலான உணவுகள் உயர் இரத்த அழுத்தம் , இதய நோய் , நீரிழிவு , புற்று நோய் போன்றவற்றை குறைப்பதற்கும் அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கும் சுகாதார ஆரோக்கிய உணவு முறையாக இது ஒரு நம்பகமான தேர்வாக காணப்படுகின்றது. ஏனென்றால் மாமிச உணவுகளில் காணப்படும் கலோரியை விட இவ் உணவுகளில் குறைந்தளவிலான கலோரிகளே காணப்படுகின்றது. மேலும் விளையாட்டு துறையில் பங்கேற்பவர்களுக்கு அதிகமாக செயல்திறன் ஊட்டத்தினை அளிப்பதில் இவ் வீகன் உணவு தேர்வுகள் முக்கியம் பெறுகின்றன. ஆம் இப்போது எங்களால் நினைத்துப்பார்க்க முடிகின்றது, விளையாட்டு துறையில் இருப்பவர்களை காலையில் ஏன் கடலை முதலான பீன்ஸ் போன்ற தானிய வகையை உண்பதற்கு பயிற்சியாளர்களை சிபாரிசு செய்கின்றனர். அவை ஊட்டச்சத்தினை வழங்குவதாகும் .
மேலும் இவ்வகையான உணவுமுறை தேர்வுகள் சூழலியல் ரீதியிலும் பங்களிப்பு செய்கின்றவையாக காணப்படுகின்றது. இன்று உலகம் பூராகவும் முகம் கொடுக்கும் ஓர் பிரச்சனையாக காலநிலை மாற்றம் காணப்படுகின்றது. அவற்றினை தணிப்பதற்கான செயன்முறையில் இவ் வீகன் உணவு வகைகள் மறைமுகமாக பங்களிப்பு செய்கின்றது. அதாவது புவி வெப்பமடைதல், பச்சை வீட்டு விளைவு வாயுக்களை வெளியேற்றத்தினை குறைப்பதற்கு இவை ஒரு மாற்றீடு வழியாக அமைகின்றது.
எடுத்துக்காட்டாக ‘PETA’ (People for the Ethical Treatment of Animals) இந்த தரவுகளின் அடிப்படையில் விலங்கு விவசாயம் காரணமாக 18 சதவீதமான பச்சை வீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றது. எனவே இவை மொத்த உலகளாவிய போக்குவரத்து துறையில் ஏற்படும் உமிழ்வுகளிற்கு சமனாதாக காணப்படுகின்றது. இவ் தரவுகளின் ஒப்பிடுகை ரீதியில் தாவர அடிப்படையிலான உணவு முறைகளின் சாதகமான காரணிகள் எவ்வாறு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள முடிகின்றது. மேலும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூட ‘2010’ காலப்பகுதியில் விலங்கு விவசாய தொழில் உள்ளூர் முதல் உலகலாவிய ரீதியில் காலநிலை மாற்றத்திற்கு சூழலியல் சார்பான பிரச்சனைக்கு பிரதிபலிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியிருந்தது.
மேலும் கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணையில் உணவுகள் தொடர்பில் பச்சை வீட்டு விளைவுகளின் உமிழ்வு எவ்வாறு மாறுபடுகின்றது என்பதனை நோக்கமுடியும்.
குறைந்தளவிலான பச்சை வீட்டு விளைவுகள் (Low GhGs)
நடுத்தர அளவிலான பச்சை வீட்டு விளைவுகள் (Middle GhGs)
கோழி இறைச்சி பால் , வெண்ணை, தயிர் முட்டை அரிசி நட்ஸ் பிஸ்கட் கேக் பழங்கள் : வாழைப்பழம் , பெரி , முலாம்பழம் காய்கறி : காளான்கள், பச்சை பீன்ஸ் , ப்ரோக்கோலி
மாட்டிறைச்சி ஆட்டிறைச்சி பண்டி இறைச்சி மீன் சீஸ்
தரவுகள் மூலம் : NCBI
மேலே காட்டப்பட்ட தரவுகளின் வாயிலாக குறைந்தளவிலான பச்சை வீட்டு வாயுக்களின் உமிழ்வு தாவரம் சார்ந்த உணவுகளில் காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்ட முடியும். அதற்கு மேலாக உணவுக்காக சுரண்டப்படும் மீனினங்களின் வீழ்ச்சியை பார்க்கின்ற போது உலகின் முக்காவாசி மீனினங்கள் சுரண்டப்படுகின்றது. இங்கே எதிர்காலத்தின் இருப்பு என்பது உறுதி செய்யப்படுகின்றது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
அத்துடன் கால்நடை பிராணிகளான கோழிகளிருந்து புரதத்தை உற்பத்தி செய்வதற்கு சோயாபீன்களில் இருந்து புரதத்தை உற்பத்தி செய்வதை விட மூன்று மடங்கு நிலப்பகுதி தேவைப்படுகின்றது. இதனால் பல இயற்கை பல்லுயிர் இனங்கள் சுரண்டப்பட்டு சூழல் சமநிலையில் மறைமுகமாக தாக்கத்தை உண்டுபண்ணுகின்றது.காலநிலை மாற்றத்தைத் தணிக்க பங்களிக்கும் உணவு மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு பொதுவான மேற்கத்திய உணவில் இருந்து குறைந்த இறைச்சி மற்றும் அதிக தாவரங்களைக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு நிலையான உணவுப்பழக்கத்தையும் கவனத்தில் கொள்வது மிகவும் சிறந்ததாக அமையும் எனலாம்.
ஆரோக்கியமான உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது எளிமையான அணுகுமுறைகளில் ஒன்றாகும். எனவே தாவர அடிபையிலான உணவு முறைகள் சூழலுக்கு நன்மையை பயக்கின்றது என்பதுடன் காலநிலை மாற்றத்தினை தணிப்பதற்கு மறைமுகமாக அதனுடைய பங்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பதை மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் மூலம் கண்டுகொள்ள முடிகின்றது.
சைவ உணவுகள் எமது அன்றாட வாழ்வில் நன்மை என்பதும் இவை விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காத அவர்களுடைய சுதந்திரத்திற்கு வழிவகுக்கின்ற அதி உயர் உணவு முறையாக பார்க்கப்படுகின்றது. நிச்சயமாக அனைத்து உணவுக்காக வளர்க்கப்படும் விலங்கினங்களை காப்பாற்ற முடியாது. ஆனால் எம்மால் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்ற மனித நேயத்தில் வாரத்தில் இரண்டு தடவையாவது நாம் இவ் உணவுவகை தேர்வுகளை பழக்கிக்கொள்ளுதல் விலங்குகளின் வாழ்க்கைக்கான முக்கிய ஓர் விழிப்புணர்வு செய்தியாக நாங்கள் கருதலாம். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்காக நிலையான உணவு தேர்வுகளை செய்வதே ஒரு நல்ல பரிமாற்றம் ஆகும்.
Nemecek T., Dubois D., Huguenin-Elie O., Gaillard G. Life cycle assessment of Swiss farming systems: I. Integrated and organic farming. Agric. Syst. 2011;104:217–232. doi: 10.1016/j.agsy.2010.10.002.
Meatless Mondays. [(accessed on 10 August 2016)]; Available online: www.meatlessmonday.com.
வெசாக் என்பது ஒரு மத மற்றும் கலாச்சார விழாவாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் வைகாசி மாதத்தில் முழு பௌர்ணமி நாளில் பௌத்த மதத்தினரால் அனுஷ்ட்டிக்கப்படுகிறது . இவ் தினம் ஆனது கவுதம புத்தரின் ஜனனம் , ஞானம் , முத்தி நிலைக்கு செல்வதை நினைவு கூறுகின்றது. சிறப்பாக இறை புத்தர் தனது காலத்தில் பிரசகித்த நல்வாழ்வு மற்றும் நல்ல நடைமுறைகளை எடுத்துயம்புகின்றது. இவ் தினம் ஆனது இலங்கையில் மட்டும் அல்லாது சிங்கப்பூர் , தாய்வான் , இந்தியா , யப்பான் மற்றும் பல ஆசிய நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
இவ் போயா நாளில் இலங்கையில் பௌத்த சமயத்தவர்களின் வீடுகளில் மற்றும் தெருக்களில் வெசாக் கூடு என்று அழைக்கப்படும் வெசாக் விளக்குகள் ஏற்றப்படுகின்றது. “ Dhamma “ புத்தரின் நினைவுக்கு ஒரு பிரசாதத்தை இவ் விளக்குகள் குறிக்கின்றன . பண்டைய காலங்களில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டன . அதனை தொடர்ந்து வர்ணமயமான விளக்குகள் வடிவங்களில் செய்யப்படடன. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பௌத்த மதத்தினரின் வாழ்வில் ஓர் தூய்மையை பிரதிபலிக்கும் வெண்மையான ஆடையும் பார்ப்பதற்கு சமாதானத்தை எல்லோர் மனதிலும் இறை புத்தர் வடிவில் நிலை பெற செய்யும் என்பதில் உறுதியானது.
சிறப்பாக இவ் வெசாக் தினத்தின் போது நன்கொடைகள் , யாத்திரைகள் மற்றும் கிராம புறங்களில் இருந்து நகரங்களுக்கு பார்வையிடும் ஒரு பருவத்தை குறிக்கின்றது. மேலும் இவ் தினத்தில் தன்சல் வழங்குவது மிகவும் ஆத்மார்த்தமான புத்தபெருமானிற்கான கடமை என நினைவுபடுத்துகிறார்கள். தன்சல் என்பது உணவு , பானங்கள் , மற்றும் இனிப்புடன் கூடிய ஸ்டால்கள் ஆகும். இது தெருக்களில் அழகான கூடாரங்களை கொண்டு வடிவமைத்த மக்களிற்கு அவர்களது அன்பை பகிர்ந்துகொள்வதற்கும் அவ் உணவுகளை அவர்களுக்கு வழங்குவதாகவும் இது காணப்படுகிறது. பெரும்பாலான தன்சால் மாலையில் திறக்கப்படுகிறது, மக்கள் வெசாக் அலங்காரங்களைக் காண பயணிக்கும்போது அவர்களுக்கு உணவை பரிசளிப்பதாகவும் இது அமைகின்றது எனலாம் .
ஸ்டால்களில் பலவகையான சைவஉணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. அட்டவணைகள் மற்றும் நாற்காலிகள் கொண்ட ஒரு மூடப்பட்ட இடத்தில் அரிசி மற்றும் கறியின் முழு உணவு, அல்லது வேகவைத்த பயறு அல்லது வேர் காய்கறிகளின் சிற்றுண்டி உணவு ஆகியவை மிகவும் பொதுவானவை. ஐஸ்கிரீம் மற்றும் தேநீர் பானங்கள் சாலையோரங்களால் வழங்கப்படுகின்றன. “தன்சலில் உணவை உட்கொள்வது என்ற கருத்து இனி ஏழைகளுக்கோ அல்லது பயணிகளுக்கோ கட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் மக்கள் மற்றும் சமூகங்களின் அனைத்து குறுக்கு பிரிவுகளுக்கும் திறந்திருக்கும்” என்பதை பல இலங்கை கல்வியலாளர்கள் கூறியுள்ளனர்.
இங்கே இவ் இரண்டு மத நாட்களில் உணவானது பொதுவாக நன்கொடையாக இருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் சுகாதார சேவை திணைக்களம் தமது சேவையில் எவ்வகையான சுத்தமான உணவுகள் மக்களிற்கு சென்றடைகின்றது என்பதை உறுதியளிப்பதில் அவர்களது கடமையை செய்வதிலும் பாராட்டப்பட வேண்டியது.
இத்தகைய சிறப்பு மிக்க தினத்தை இன்றைய ஆண்டு மிகுந்த சமூக இடைவெளியை பேணுவதனுடன் நாம் செயற்பட வேண்டிய காலமாக உள்ளது. “ COVID 19 “ எனும் தொற்று நோயினால் இன்றைய நாளில் தன்சல் ஐ மேற்கொள்ளமுடியாது. ஆனால் அவ் நன்கொடைகள் எதோ ஒரு வடிவத்தில் வறிய மக்களையும் இவ் நோயால் இடர்களை நோக்கும் சமூகத்துக்கும் எங்களான பங்களிப்பை வேறு வழிகளில் மேற்கொள்ள முடியும் என்பதில் அச்சமில்லை. இதனை இங்கு பலர் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை நாம் நம்புகிறோம். அவர்களுக்கான பண உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை அன்பளிப்பு செய்தல் மற்றும் பிற அன்பான செயல்கள் இவ் வெசாக் தினத்தில் மக்களுக்கான ஓர் வேறுபட்ட தன்சல் ஆக காணப்படும். ஒரு எதிர்கால சுபீட்ச்சத்தை எம் நாட்டில் எல்லோர் மத்தியிலும் நோயின்றி கொண்டுவரும் என்ற பிரார்த்தனைகளை சிறப்பான இவ் புனித நாளில் பிரார்த்திப்போமாக!
சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சூரியன் மீன ராசியிலிருந்து மேட ராசிக்கு பிரவேசிக்கும் காலம் இவ் சித்திரை புத்தாண்டு ஆகும் . இது எல்லோரும் அறிந்ததே , தமிழ் – சிங்கள பண்டிகையாக காணப்படுகிறது . எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியையும் குடும்பத்தின் உறவினர்களுக்கு இடையில் அன்பை பகிர்ந்து கொள்ளும் ஓர் தருணம் ஆகும் . இவ் புதுவருட பிறப்பை “சார்வரி புதுவருட பிறப்பு” என்று அழைக்கின்றோம் .இன்றைய தினம் (13.04.2020)வாக்கிய பஞ்சாங்க படி பி.ப7.26 க்கு உதயம் ஆகின்றது . இன்று உலகை உலுக்கும் COVID 19 எனும் நோயினால் உலகமே பூட்டப்பட்டு இருக்கும் நிலையில் அனைவரும் ஆரோக்கியத்துடனும் இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் நோயினால் பீடிக்கப்பட்டவர்களை மீட்டு எடுக்கும் ஓர் வருடமாக அமையட்டும் என இறைவனை பிரார்த்திப்போமாக !
இங்கே,குறிப்பாக தமிழர்கள் சித்திரை புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் ?அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இவ் எழுத்துருவின் மூலம் தெரிந்துகொள்வோம் . சைவ மக்கள் என்ற வகையில் இவ் நன்னாளில் அசைவம் துறந்து சைவ உணவு முறைகளை கடைபிடிப்பதே நியதி ஆகும்.
புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் மருத்து நீர் வைத்து தோய்ந்து புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று மகிழ்வான தருணத்தை கொண்டிருத்தல் என்பது தமிழர் பண்பாட்டில் குடும்பங்களுக்கு இடையில் காணப்படுகின்றது. இங்கு மருத்துநீர் வைத்து தலைக்கு நீர் ஊற்றல் என்பது எம்மை சுத்தப்படுத்தும் ஓர் முறையாகவும் முன்னோர்களின் தழுவலை பின்பற்றி வரும் செயன்முறையாகும் .
மகிழ்வான இவ் தருணம் இனிமையானதாக அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுவையான சிற்றுண்டிகள் போன்ற சைவ உணவுவகைகளை தயாரிப்பது தமிழ் பண்பாடாகும் . குறிப்பாக இறைவனுக்கு படைப்பதற்காக எல்லோர் வீட்டிலும் பொங்கல் மேற்கொள்ளப்படும். இது இனிப்பு சுவையாக இருப்பதுடன் அரிசி , தேங்காய்ப்பால் , சீனி , சர்க்கரை , பயறு பிளம்ஸ் , கச்சான் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும். இறைவனுக்கு படைத்த பின்பு ஒவ்வோர் குடும்பமும் ஒன்றாக இணைந்து களிப்புடன் அதனை உண்டு மகிழ்வார்கள் .
புத்தாண்டு என்பது தனி ஒரு குடும்பமாகவோ , நபராகவோ கொண்டாடப்படுவது என்பது சிறந்த காரியம் அல்ல. அயலவர்கள் , உறவினர்கள் என அனைவரது வருகையால் தழைத்தோங்கும் தருணம் அது. எனவே எல்லோர் குடும்பமும் அவர்களது பூரிப்பை பகிர்தல் , அறுசுவை மிக்க பலகார உணவு வகைகளை தயாரித்தல் என்பது வழக்கம். பகிர்ந்துண்ணல் என்பது எல்லோர் மனிதம்களின் பண்பு ஆகும். எனவே இவ் புத்தாண்டு தினத்தில் சைவ மக்கள் குறிப்பாக பயித்தம் உருண்டை , அரியதரம் , தோய்ப்பான் , சிப்பி , பால்ரொட்டி , கேசரி மற்றும் முறுக்கு போன்ற பலகாரங்களை தயாரிப்பார்கள்.
இவை ஆரோக்கியமான சூழல் உருவாகும் என்பதில் ஒவ்வொரு சிற்றுண்டிகளில் உள்ளடங்கும் பொருட்கள் எடுத்துயம்பும். பயிற்றமா , அரிசிமா, வறுத்த தேங்காய்ப்பூ , சீனி , சர்க்கரை , என்பவற்றை கொண்டு பயிற்றம் உருண்டை தயாரிக்கப்படுகிறது.
அரிசி மா, அவைத்த கோதுமை மா , சீனி , தேங்காய்ப்பால் என்பவற்றை உள்ளடக்கி அரியதரம் , பால் ரொட்டி (சீனி உள்ளடங்காது)தோய்ப்பான் , சிப்பி என்பவை தயாரிக்க படுகின்றது.
வறுத்த ரவை , சீனி , நெய் /மாஜரீன் , பாதம் , பிளம்ப்ஸ் , கச்சான் என்பவற்றை உள்ளடக்கி கேசரி மேற்கொள்ளப்படுகின்றது. இது Vegan உணவு செயன்முறையில் இருந்து வேறுபட்டது. ஆனால் Vegetarian உணவு சார்ந்ததாக காணப்படுகின்றது. ஆனால் நெய்க்கு பதிலாக தேங்காய்ப்பாலை கலந்து இதனை தயாரிக்கும் போது இது எமக்கு ஒரு Vegan உணவு வகையை சேர்ந்ததாக பிரதிபலிக்கும்.
மேலும் எல்லாம் இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் நிச்சயம் எல்லோர் குடும்பத்திலும் ஓர் உறைப்பு பலகாரத்தையும் மேற்கொள்வார்கள். பெரும்பாலும் முறுக்கு தயாரிக்கடுகின்றது. இது கோதுமை மா / கடலை மா , மிளகாய் தூள் , உப்பு , மிளகுத் தூள் , சீரக தூள் என்பவற்றை ஒன்றிணைத்து தயாரிக்கப்படுகின்றது.
இங்கே உணவுக அனைத்தும் ஓர் ஆரோக்கிய உணவுவகையை சார்ந்தவையாக அமைவதையே காணலாம் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விருப்பப்பட்டு உட்கொள்ளும் பலகார வகைகளாகவும் மகிழ்வுடன் எல்லோரும் அந்நாளில் ஒன்றிணைந்து களிப்புடன் உண்ணும் உணவு பொருட்களாக இவை அமைகின்றது என்பதில் அச்சமில்லை.
இவ் 2020 சித்திரை புத்தாண்டு என்பது எல்லோருக்கும் ஓர் சவால் நிறைந்த வருடமாக அமைகின்றது. எல்லோரும் பாதுகாப்பாக வீட்டில் தங்கியிருந்து பழமையான பல தகவல்களை ஆராய்வதிலும் எமது உணவு பழக்கவழக்கங்களில் உள்ள சிறப்பையும் நாங்கள் ஆராய்வது வீண் போகாது. நம் முன்னோர்கள் எவ்வளவு விசேடமாக இதனை கொண்டாடினார்கள் ? அவர்களது உணவு பழக்க வழக்கங்கள் எத்தகையது ? என்று கேட்டு தெரிந்து கொள்ள இருக்கும் தாத்தா, பாட்டி மிகவும் அதிர்ஷ்டம். ஆம் என்னுடைய இவ் கருத்துக்களும் என் பாட்டி என் அம்மாவிற்கு கூறப்பட்ட விடயங்களின் தொகுப்பாகவே நான் இதை எழுதினேன்.
பாதுகாப்பான உலகை கட்டியமைப்பதற்கான ஓர் பிரார்தனையும் இவ்வருடம் எல்லோர் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இதற்கு ஓர் முற்றுகை இடுகிறேன்.
அனைவருக்கும் இனிய சார்வரிபுதுவருடபிறப்பு நல் வாழ்த்துக்கள்!
நம்புவோமா இல்லையோ, இலங்கையில் இனிப்பு கடைகளைத் தவிர்த்து ஒரு சில கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் மட்டுமே இருந்த ஒரு காலம் இருந்தது. சிறிய தேர்வு இருந்தது மற்றும் வெளியே சாப்பிடுவது இனிப்புகள் தொடர்பில் எப்போதும் ஒரு விருப்பமாக இருந்தது. . அதனால்தான் Bombay Sweeets எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெறும். Bombay Sweet house க்கு வருகை எப்போதுமே ஒரு விருந்தாக இருந்தது, இது வயிற்றுக்கு மட்டுமல்ல, ஆனால் அது ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. பிரதிபலித்த சுவர்களில் இருந்து, சில வண்ணங்களில் வெள்ளி மற்றும் தங்கத்துடன் பளபளக்கும் வண்ணங்கள் மற்றும் இனிப்பு பால் வாசனைகள் சற்று மேசை வரை காட்சிகள் ஒவ்வொரு குழந்தையின் கனவு நிலமாகவும் இருந்தன. நான் அதிசயத்துடன் அதன் வெளிப்புற தோற்றத்தை பார்த்து மகிழ்ந்தேன் .
கொழும்பு 3 இன் புகழ்பெற்ற Bombay sweeet house உள்ளது எல்லோரும் அறிந்ததே. எனினும் ரமேஷ், சுரம்யா மற்றும் நான் வெள்ளவத்தை செல்ல முடிவு செய்தோம், நாங்கள் கடைக்குச் சென்றோம். மறு ஸ்தாபனம் உண்மையில் அதன் கண்ணாடி ஜன்னல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த ஸ்தாபனத்தைத் தேடும் விசுவாசமான வாடிக்கையாளர்கள் இன்னும் ஏராளமானோர் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இந்த கடை நாம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறியது. உட்கார்ந்து குடிக்க சில நாற்காலிகள் கொண்ட ஒரு பக்கத்தில் சுவரில் ஒரு நீண்ட அட்டவணை பொருத்தப்பட்டிருந்தது, கொழும்பு 3 கடையின் ஒன்று பெரியதாக இல்லை என்றாலும், பழைய நினைவுகளை அழகாக வர்ணித்து கொண்டிருந்தாள் சுரம்யா.
Bombay Sweet House பால், நெய், சர்க்கரை மற்றும் வட இந்திய இனிப்புகளையும் கொண்டிருக்கும். சுதந்திரம் பெற்றதிலிருந்து அமைக்கப்பட்ட, தாவூத் போய் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள் இதை நடத்தி வருகின்றன, மூன்றாம் தலைமுறை நிபுணத்துவத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது. ஜிலேபி முதல், ஒட்டும் மஸ்கட்ஸ் மற்றும் குலாப் ஜாம் வரை, அவர்கள் அனைத்தையும் வைத்திருந்தனர். முக்கியமானது என்னவென்றால், இந்த இனிப்புகளில் எந்த ஜெலட்டின் அல்லது முட்டைகளும் இல்லை, எனவே, பால் பொருட்களை உட்கொள்ளும் சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஏற்றது.
அவர்கள் இறைச்சி அற்ற சைவ சமோசாக்கள் இரண்டையும் வறுத்திருக்கிறார்கள், அவை சூடாகவும் நம்பமுடியாத அளவிற்கு சுவையாகவும் இருந்தன. நான் குறிப்பாக அவர்களின் சைவ சமோசாவை வைத்திருக்க விரும்பினேன், இது துரதிர்ஷ்டவசமாக நாங்கள் பார்வையிட்ட நாளில் விற்கப்பட்டது.
Bombay sweet house என்றாலே அதன் ஃபலுடாவுக்கு பிரபலமானது, இது ஒரு அனுபவமாகும். கீழே உள்ள சர்பத்துடன் தொடங்கி பின்னர் பால், கசகசா விதைகள் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றால் நிரப்பப்படுவது ஓர் சுவையாகும். . இருப்பினும், ஆனால் நாங்கள் கச கசா விதைகள் (துளசி விதைகள்) (ரூ .100) மற்றும் ஒரு நன்னாரி paanam (ரூ .100) உடன் குடிப்பதற்கு முடிவு செய்தோம்.
பானங்கள் பிளாஸ்டிக் உறிஞ்சியுடன் பரிமாறப்பட்டன, நாங்கள் எப்போதும் விரும்புவது உலோகத்தை ஆகும், ஹ்ம்ம்…. பானத்தின் தன்மையானது, இது ரோஸ் நீரில் சுவைக்கப்படும் ஒரு சர்க்கரை சிவப்பு பானமாகும். உள்நாட்டில் ஈராமுசு என்று அழைக்கப்படும் நன்னாரியை நான் ஒருபோதும் முயற்சித்ததில்லை, உடலை குளிர்விக்கக்கூடிய பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த பானத்திற்காக நன்னாரி வேர்கள் வேகவைக்கப்படுகின்றன, அதை முயற்சிக்க என்னால் காத்திருக்க முடியவில்லை. எனவே, சர்க்கரை இனிப்பு என் உணர்வுகளைத் தாக்கியதால் நான் ஒரு ஆழமான கசப்பை எடுத்து கண்களை மூடினேன். இந்த பானத்தில் சர்க்கரை உள்ளடக்கம் மிக அதிகமாக உள்ளது அல்லது ஆதலால் நிறைய அருந்த முடியவில்லை.. அதற்கு பின்னர், பின்னர் சுவைக்க சில இனிப்புகளையும் எடுத்துக்கொண்டோம்.
இப்போது இனிப்புகளுக்கு! ரோஜா சாரம் பற்றிய குறிப்புகளுடன் வெள்ளை பெர்பி (White Berfi )பால் இருந்தது, இது பழைய காலங்களில் ஒழுக்கமானதாக கருதப்படும். மேலே உள்ள தெளிப்பான்கள் அவற்றை வேடிக்கையாகவும் நவீனமாகவும் ஆக்குகின்றன, மேலும் இது உங்கள் வாயில் அதன் சுவையை உணரவைக்கும். .
எங்கள் அடுத்த தேர்வு மிகவும் விரும்பப்பட்ட லட்டு. மீண்டும் முந்திரிப் பருப்புகள், சுண்டல் மாவு, பால், நெய் மற்றும் திராட்சையும் இந்த அற்புதமான விருந்தில் சேர்க்கப்படுகின்றன. இனிமையாகவும் நொறுங்கியதாகவும் இது மீண்டும் கடந்த காலத்தின் சுவை. ஆண்டுகளில் பழைய சமையல் வகைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை அறிவது அழகாக இருக்கிறது.
எங்கள் இறுதி இனிப்பு ஜிலேபி . இது மாவு மற்றும் நெய்யிலிருந்து தயாரிக்கப்பட்டு, ஆழமான வறுத்த மற்றும் பின்னர் சர்க்கரை பாகில் தோய்த்து, இது எனக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது. இது சந்தேகத்திற்கு இடமின்றி உண்பதற்கு தோன்றும். இது ஒரு முழுமையானதாக இருக்க வேண்டும்.
Bombay Sweet House அதன் வயதான பழைய சிறப்பைப் பிரதிபலிக்கவில்லை, மேலும் அதன் முந்தைய ஆண்டு மகிமையின் பழைய பதிப்பைப் போல உணர்கிறது. ஆனால் அதன் இனிப்புகளின் சுவை மற்றும் தரம் அப்படியே இருக்கின்றன, அது எப்போதும் மாறிவரும் நுகர்வோரை ஈர்க்க போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்
Bombay sweet house க்கு அடுத்து, பம்பலபிட்டி பக்கத்தை நோக்கி நடந்த பிறகு, வாழ்க்கையை விட பெரிய Bombay sweet centre பெயர் பலகையை பிரம்மாண்டமான செலவழிப்பு தேநீர் குவளையுடன் கண்டோம். அதில் பாதாம் பால் மற்றும் காய்கறி சமோசாக்கள் இருந்தன என்பதை நினைவில் வைத்தோம். ,
Bombay sweet centre ஒரு பெரிய நவநாகரீகமாகவும் நவீனமாகவும் தோன்றுகிறது. காட்சிகளில் வட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இனிப்புகள் மற்றும் சர்க்கரை பூசப்பட்ட பாதாம் போன்ற இனிப்புகள் உள்ளன.
நாங்கள் மாடிக்குச் சென்றோம், சுவர் காகிதத்தால் வரைந்து இருந்தது உண்மையான choclate ஸ்டோர் கருப்பொருளில் இருந்தது, அவை urber eats லும் பதிவு செய்யப்பட்டுள்ளது காண முடிந்தது. அதனுடைய உற்பத்தி பொருட்கள் எல்லோருக்கும் பகிரப்படுவது உண்மையில் சிறந்ததே
இனிமையாக இனிமேல் இடமில்லாமல் நாங்கள் சைவ சமோசாக்களை ஆர்டர் செய்தோம், அவற்றை சூடாகவும் நொறுங்கியதாகவும் பெற்றோம். அவை உருளைக்கிழங்கு, கரட் மற்றும் லீக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தன, நம்பமுடியாத அளவிற்கு சுவையாக இருந்தன! பாதாம் பால் கிடைத்தபோது மிகவும் சுவையாக இருந்தது, துரதிர்ஷ்டவசமாக பாதாம் மற்றும் பால் இரண்டிலும் ஒரு சதவீதம் உள்ளது. ஆகையால், இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு பயணமல்ல, ஆனால் நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய புதிய பழச்சாறுகள் அவற்றில் உள்ளன.
நாங்கள் சமோஸாக்களை சாப்பிடும் பட்சத்தில் அவ் சுவரில் காணப்பட்ட வரலாறுகளை பார்த்து தெரிந்துகொண்டோம் . பழைய ஆரம்பம் முதல் அதன் நவீன ஸ்தாபனம் வரை bombay sweet centre நிச்சயமாக நீண்ட காலம் வந்துவிட்டது, நிச்சயமாக எதிர்காலத்தைப் பற்றிய கண்களைக் கொண்டுள்ளது.
இன்று, வெள்ளவத்தை பகுதி வட இந்திய இனிப்புகளை வழங்கும் பல கடைகளைக் கொண்டுள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னர், விஷயங்கள் எப்படி இருந்தன என்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இருப்பினும், பழைய பெயரை நிலைப்படுத்தும் வகையில், Bombay sweet house மற்றும் Bombay Sweet centre ஆகிய இரண்டும் தங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை வழங்கி வருகின்றது என்பதில் அச்சமில்லை
வட இந்திய இனிப்புகள் சைவ உணவு உண்பவை அல்ல, அவை “Lacto” சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே பொருத்தமானவை (எந்த இறைச்சி, மீன், கோழி அல்லது முட்டையையும் உட்கொள்ளாமல், ஆனால் பால் பொருட்களை உட்கொள்ளும் சைவ உணவு உண்பவர்கள்) ஆனால் அவர்களிடம் சில ருசியான சமோசாக்கள், பழச்சாறுகள் மற்றும் நன்னாரி, ரோஸ் ஷர்பெட் போன்ற பானங்கள் உள்ளன மற்றும் எங்கள் வெப்பமண்டல வானிலைக்கு இடமளிக்கும் நெல்லி பானம் உண்மையில் நட்பானது,
ஒரு நுகர்வு பாட்டில் இருந்து உணவை உட்கொள்வது ஒரு புதிய அனுபவமாகும், அங்கு ஒரு வெப்பமூட்டும் உறுப்புடன் ஒரு பிரிக்கப்பட்ட பானை ஒரு அட்டவணையின் மையத்தில் ஒரு பிரிவில் ஒரு சூப் / குழம்பு தளமும் மற்றொன்றில் ஒரு காரமான சாஸும் அமைக்கப்படுகிறது. பல்வேறு சோயா பொருட்கள், கீரைகள், காய்கறிகள், இறைச்சிகள், கடல் உணவு, பாலாடை மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை குழம்பில் சேர்த்து, சமைத்து ஒட்டும் அரிசி பரிமாறலாம். வகுப்புவாத உணவுக்கு இது ஒரு அற்புதமான முறையாகத் தெரிகிறது, அது நிச்சயமாக புதிராகத் தெரிகிறது. குழம்பில் இறைச்சியை நிச்சயமாக சேர்க்க முடியும் என்றாலும், குழம்பு எங்களுக்கு சைவமாக வேண்டும் என்றால் அந்த அறிக்கையில் எங்கள் விருப்பத்திற்கு தாவர அடிப்படையிலான உணவாக மாறி கொள்ளலாம்.
இலங்கையில் நான் முதன்முதலில் டிஷ் அறிமுகப்படுத்தப்பட்டபோது, விளக்கக்காட்சி வித்தியாசமானது மற்றும் வெளிப்படையாக நான் நினைத்தேன், இதில் ஓர் புதிய அனுபவம் கிடைத்தது.
Colombo City Center இன் உணவு ஸ்டுடியோவின் மேல் தளத்தில் Mala Hot Pot அமைந்துள்ளது. இப்போது ஒரு சங்கடமான கதைக்கு. இந்த உணவுக் கடை அதன் உரிமையாளரான மாலாவின் பெயரிடப்பட்டது என்று பல மாதங்களாக நான் உறுதியாக நம்பினேன். மாலா இலங்கையில் மிகவும் பொதுவான பெண் பெயராக இருப்பதால், இந்த எண்ணத்தை நான் ஒரு கணம் கூட கேள்வி கேட்கவில்லை. நட்பாக இருக்கவும், மறுஆய்வுக்கு கூடுதல் தகவல்களை சேகரிக்கவும் நான் ஸ்தாபனத்தின் உரிமையாளரான மாலாவைப் பற்றி ஊழியர்களிடம் கேட்டேன், மாலாவுக்கு உரிமையாளருடன் எந்த தொடர்பும் இல்லை என்று மெதுவாகச் சொல்ல வேண்டும், ஆனால் சிச்சுவான் கொண்ட சீன கலப்பு மசாலாவுக்கு வழங்கப்பட்ட பெயர் மிளகுத்தூள், மிளகாய் மற்றும் பிற மசாலா. அதனுடன் எங்களுக்கு அதன் பொருள் கிடைத்தது பின்பு நாங்கள், ஆர்டர் செய்யும் பணியைத் தொடங்கினோம்.
இப்போது இந்த வரிசைப்படுத்தும் செயல்முறைக்கு ஒரு முறை உள்ளது. படி வழிகாட்டியின் படி இங்கே பார்க்கலாம் .
Tongs ஐ ஒரு தட்டில் எடுங்கள்
தேர்வில் இருந்து எந்த அளவு காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்
உங்கள் மசாலா அளவை லேசான, நடுத்தர மற்றும் உயர்விலிருந்து தேர்வு செய்யவும்
உங்கள் தட்டில் எடை போட்டு அதற்கேற்ப பணம் செலுத்துங்கள்
உங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனை எடுத்து, Mala Hot Pot உங்களுக்கு ஒன்றை வழங்காததால் ஒரு பானத்தைத் தேடுங்கள்.
சாதனம் தயார் என்பதற்கான ஒலியை எழுப்ப நீங்க சென்று அதை பெற்று கொள்க
இந்த முழு வரிசைப்படுத்தும் செயல்முறையும் நீங்கள் சாப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். Pak Choi, Kan Kung, thinly sliced carrots, cauliflower florets, wood car mushrooms, black mushrooms, Tofu, Tofu skin, Bamboo & potato noodles“ ஆகியவற்றை தேர்ந்தெடுத்தோம் . நாங்கள் சென்றபோது அவர்களிடம் seaweed sheets seaweed sheets இல்லை, அது சுரம்யாவின் விருப்பத்தை உடைத்தது, ஏனென்றால் அதை அவள் முற்றிலும் விரும்பியிருந்தாள் .
இப்போது இங்கே நியாயமான எச்சரிக்கை. Mala Hot Pot ஒரு வெப்ப சாதனத்தில் டிஷ் பரிமாறவில்லை, உங்களுக்கு வழங்கப்படுவது வெறுமனே ஒரு கிளறல்-வறுக்கவும், ஒரு குழம்பு சாஸில் ஒரு ஒட்டும் அரிசி கிண்ணத்துடன் இருக்கும் ஒரு இணைவு ஆகும், நாங்கள் அங்கு முழு அனுபவத்தையும் பெறவில்லை என்றாலும்இது ஒன்றின் சுவையே அதனுடைய உணவுவகைகளில் சிறப்பை எடுத்தியம்பியது.அதனுடன் சுழலும் வெவ்வேறு அமைப்புகள் உண்மையிலேயே ஈடுசெய்கின்றன. முறுமுறுப்பானது முதல் லேசானதாக இருந்தாலும், இந்த டிஷ் இன்னும் மசாலா மற்றும் ஒட்டும் அரிசி உண்மையிலேயே விஷயங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. மொத்தத்தில் இது உண்மையிலேயே சத்தான உணவாக இருந்தது, அது சில அற்புதமான சுவையுடன் நிரம்பியிருந்தது. மொத்தத்தில் நாங்கள் ரூ.900 செலவிட்டோம், அது எங்களை நிரப்பியது.
தாவர அடிப்படையிலான உணவு உண்மையில் அருமை என்பதை ‘mala hot pot’ இன் ஒரு பகுதியும் எங்களிற்கு நியாயப்படுத்தியிருந்தது.